13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (18) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சுமார் 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் சுமார் 16,436 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (17) காலை 6 மணியில் இருந்து இன்று (18) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 946 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 18 முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 5660 பேருக்கு தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது.




ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு