கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (18) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சுமார் 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் சுமார் 16,436 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (17) காலை 6 மணியில் இருந்து இன்று (18) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 946 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மார்ச் 18 முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 5660 பேருக்கு தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..