ஸ்கொட்லாந்தில் நடைமுறையில் உள்ள முடக்கநிலையை தளர்த்துவதற்கான வரைபை, நான்கு கட்டமாக முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) வெளியிடவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்புவதாக நிக்கோலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று வீதம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பீட்டின் போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது பாதுகாப்பானது என கருதப்பட்டால் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வீதம் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான மிகவும் படிப்படியான செயல்முறை இதுவெனவும் அவர் கூறினார்.
அத்துடன், முதல் கட்ட தளர்த்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமெனவும், ஆரம்ப கட்ட தளர்வில் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..