மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சேவை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..