20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வவுனியா அரச அதிபர் சந்திப்பு

வன்னிக்கான புதிய இராணுவத்தளபதியாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிங்க வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன ஆகியோருக்கான சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்புக்கள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராலோ அல்லது வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்கள அலுவலரோ உரிய முறையில் இச் சந்திப்பு குறித்து வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை.

இதையடுத்து சில ஊடகவியலாளர்கள் இச்சந்திப்பு செய்திகளை சேகரிப்பதை புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இவ்வாறு கடந்த காலங்களிலும் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்து.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்கள அலுவலர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் இன்றைய செயற்பாடும் இவ்வாறே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் செயற்படும் மாவட்ட செயலக தகவல் திணைக்கள அலுவலர் ஆகியோரின் செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமலிருப்பதற்கு அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள்.

வவுனியாவில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் சார்ந்து பணியாற்றிவரும் நிலையில் ஒரு சில ஊடக நிறுவனங்கள் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அறிவித்தல் வழங்கப்படுவதனால் செய்தி சேகரிப்பு செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.




வவுனியா அரச அதிபர் சந்திப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு