04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

பிரேஸிலில் நேற்று 1,000 இற்கும் அதிக மரணம்

பிரேசிலில் நேற்று கொரோனா தொற்றினால் 1,156 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 26,725 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, பிரேசிலில் கொரோனாவால் 4,38,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை பிரேசிலில் 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த சூழலில் பிரேசிலுக்கு அமெரிக்க மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவுக்கும் அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கொரோனா நடவடிக்கை தொடர்பாக போல்சனாரோவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்ததால், சுகாதரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட நெல்சன் டீச்சும்முன் பதவி விலகினார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பிரேஸிலில் நேற்று 1,000 இற்கும் அதிக மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு