04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக தண்டனை இந்த தொற்று நோய் என வர்ணித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

கொரோனா வைரஸ் மேற்கு நாடுகளில் பரவுவதால் தாம் மகிழ்ச்சியடைவதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது எதிரிகளிற்கு கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக தண்டனை இந்த தொற்று நோய் என வர்ணித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா அல்-குரைஷி வெளியிட்டுள்ள புதிய குரல்ப்பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

‘கடவுள், தனது விருப்பப்படி, இந்த காலத்தின் கொடுங்கோலர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரு தண்டனையை அனுப்பினார், அதை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. கடவுளின் இந்த தண்டனைக்கு இன்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.எஸ் பயங்கரவாதிகள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து போரிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். எதிரிகளை நிம்மதியாக ஒருநாள் கூட இருக்க விடக்கூடாது என தமது அமைப்பினரை உசுப்பேற்றியுள்ளார்.




கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக தண்டனை இந்த தொற்று நோய் என வர்ணித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு