05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

சிங்கபூரில் மேலும் கொரோனா தொற்று

சிங்கப்பூரில் மேலும் 506 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (30) உறுதியாகியுள்ளது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் அல்லது நிரந்தவாசிகள். மேலும் மூவர் வேலை அனுமதி சீட்டுடன் சமூகத்தில் தங்கியிருப்பவர்கள்.

பெரும்பாலான தொற்று சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இன்றைய எண்ணிக்கையைச் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் இதுவரை 34,366 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று தொற்றிலிருந்து குணமடைந்த 1,337 நோயாளிகள் வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,622.




சிங்கபூரில் மேலும் கொரோனா தொற்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு