18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி தற்கொலை

மட்டக்களப்பு- வெல்லாவெளி, காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற சிறுமி ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என கண்டித்ததால் தற்கொலை செய்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் 10, மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்ற சிறுமி, தூக்கில் தொங்கியுளளார். இதை அவதானித்த தாயார், உடனடியாக சிறுமியை துக்கில் இருந்து கழற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையில் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்




மட்டக்களப்பில் 15 வயது சிறுமி தற்கொலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு