கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மூடப்பட்ட நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகும் என எல் சல்வடோரின் ஜனாதிபதி நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விமான நிலையம் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பமாகாத நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயன்முறை படிப்படியாக மற்றும் பல கட்டங்களாக மீண்டும் ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி நயீப் புக்கேலே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எல் சல்வடோரில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில கடுமையான நடவடிக்கைகளை ஜனாதிபதி நாட்டில் அமுல்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அவர், “தனிமைப்படுத்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது, மீண்டும் திறப்பதை எங்களால் தவிர்க்க முடியாது. ஆகவே திங்கட்கிழமை வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..