10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

வதந்திகளுக்கு செல்பி எடுத்து முற்றுப்புள்ளிவைத்த சிவகுமார்

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று நடிகர் சிவகுமார் (79), மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தனிமைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பரிசோதனை முடிவில் சிவகுமாருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிவகுமார் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

1965 இல் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் சிவகுமார். 1967 இல் வெளியான கந்தன் கருணை படம் அவருக்குப் பேரும் புகழையும் அளித்தது. 2001 இல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்ததுடன் இனிமேல் பெரிய திரையில் நடித்தது போதும் என முடிவெடுத்தார் சிவகுமார்.

1999 முதல் 2005 வரை சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார். நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்த பிறகு கம்பராமாயணம் குறித்த ஆய்வில் இறங்கினார். கம்பராமாயணம் குறித்த சொற்பொழிவுகளில் அதிகமாகப் பங்கெடுக்க ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவரும் குறிப்பிடும் விதத்தில் தனது உடலை யோகா மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் திடமாகக் காத்து வருகிறார்.




வதந்திகளுக்கு செல்பி எடுத்து முற்றுப்புள்ளிவைத்த சிவகுமார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு