13,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை!

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு எந்த முயற்சியையும் இதுவரை எடுக்காததையடுத்து, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை கவனப்படுத்துவதென கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்கும்படி மட்டக்களப்பு எம்.பி, இரா.சாணக்கியனிற்கு கூட்டமைப்பின் தலைமை அறிவித்தல் விடுத்திருந்தது.

இதன்படி, இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படும். இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் ஏனைய எம்.பிக்களில் யாராவது ஒருவர் வழிமொழிந்து உரையாற்றுவார்.





மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு