13,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

காயப்பட்ட நிலையில் கொம்பன் யானை மீட்பு

திருகோணமலை - மொரவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொம்பன் யானையொன்று காயப்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (9) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரவெவ ஆறாம் வாய்க்கால்- நவநகர குளத்துக்கு அருகில் 4 வயதுடைய கொம்பன் யானை காயப்பட்ட நிலையில் விழுந்துள்ளதாகவும் காயம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இந்த யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கிரித்தலை பகுதியிலிருந்து வைத்தியர்கள் வருகை தர உள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மொரவெவ பிரதேச பொறுப்பாளர் ஜகத்தசநாயக்க தெரிவித்தார்.

ஆனாலும் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




காயப்பட்ட நிலையில் கொம்பன் யானை மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு