அரசு ஊழியர்கள், பணியின்போது ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய கூடாது என மஹா., அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மஹா., அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி, அலுவலகத்திற்கு மோசமான செருப்புகளை அணிய கூடாது. கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். வெள்ளிகிழமை கதர் ஆடை அணிய வேண்டும். உடைகள் விஷயத்தில், அரசு ஊழியர்கள் பற்றிய பிம்பம் மக்கள் மத்தியில் மோசமாக உள்ளது
எனவே அரசு ஊழியர்கள் பணியின் போது சுத்தமான, சரியான உடைகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் - சட்டைகளை துப்பாட்டாக்களுடன் அணியலாம், ஆண்கள் சட்டை - பேண்ட் அணியலாம். டிசைன் டிசைனான உடைகள், எம்ப்ராய்டரி படங்கள், ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
0 Comments
No Comments Here ..