12,May 2024 (Sun)
  
CH
சினிமா

BIGG BOSS இல் 2 பேர் வெளியேற்றம்!

இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படவுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள்.

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராகவும் அடுத்ததாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேறினார்கள். இதையடுத்து பாடகி சுசித்ரா, மாடல் சம்யுக்தா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோரும் வெளியேறியுள்ளார்கள்.

இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் கேப்ரியல்லா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி, சோம் ஆகியோர் உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளார்கள். இதை கமல் உறுதி செய்துள்ளார்கள். இன்றைய விளம்பரத்தில் கமல் கூறியதாவது:

பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன். ஜோடியாக விளையாடினீர்கள் என்றால் ஜோடியாக வெளியேற வேண்டியிருக்கும். கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம். கேட்டபாடில்லை. (பார்வையாளர்களைப் பார்த்து) இப்போது நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். நான் கேள்விப்பட்டவரையில் இந்த வாரம் இருவர் வெளியேறுகிறார்கள். அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்றார்.




BIGG BOSS இல் 2 பேர் வெளியேற்றம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு