பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய தினம் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷா "சில காரணங்களால் அவர் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது.
மேலும் சிலர் "அவர் ரியோ மற்றும் அர்ச்சனாவின் சார்பாக தான் அவர் விளையாடுகிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நிஷா வெளியேறிய பின்பு முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் "அன்பு உறவுகளுக்கும் வணக்கம் . நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன். இன்று நான் காயப்பட்டு விட்டேன். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..