கொரோனா வைரஸினால் நாட்டிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்த மேலும் 77 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சவூதி அரேபியாவிலிருந்து 52 பேரும் கட்டாரிலிருந்து 25 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.













0 Comments
No Comments Here ..