கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவு பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடுவதுடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 341 மில்லி மீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக புதிய காத்தான்குடி, நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, கிரான் உட்பட்ட பல இடங்களின் தாழ்நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..