நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 5 மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்க்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கைதியான 68 வயது ஆண் ஒருவர் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார்.
நிமோனியா - கொவிட்-19 நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொழும்பு 15 ஐ சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி மரணித்தார்.
கொவிட்-19, நிமோனியா மற்றும் சிறுநீரக தொற்று நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தர்காநகரைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், கடந்த 18ஆம் திகதி தனது வீட்டில் வைத்து உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம், குருதி நஞ்சானமை மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கொன பகுதியை சேர்ந்த 63 வதயான பெண் ஒருவர், கடந்த 19ஆம் திகதி தனது வீட்டில் மரணித்தார்.
கொவிட்-19 தொற்றினால் குருதி நஞ்சானமை, நீரிழிவு உயர் இரத்த அழுத்தத்துடன் ஏற்பட்ட நோய் நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு - 10'ஐ சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்ததார்.
அவரது மரணித்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..