26,Apr 2024 (Fri)
  
CH
கட்டுரைகள்

51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்த இளைஞன்

கேரளாவில் 51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து அவரை கொலை செய்த சம்பவத்தில், இளைஞன் அவரை சொத்துக்காகவே திருமணம் செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஷஹாகுமாரிக்கு 51 வயதும், அருணுக்கு 28 வயது என்பதால், இவர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதன் பின் நண்பர்களின் கிண்டல் போன்றவைகளால், அருண் மனைவியை கொலை செய்தார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அருண் அப்பெண்ணை, சொத்துக்காகவே காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷஹாகுமாரி (51) காரக்கோணம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நல்ல வசதி இருந்தும் திருமணம் செய்யாமலே வாழ்ந்துவந்தார்.

இந்த நிலையில், தனது வயது முதிர்ந்த தாயை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம்.

அந்த மருத்துவமனையில் நெய்யாற்றாங்கரை அருகே உள்ள பத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அருண் (26) என்பவர் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்த ஷஹாகுமாரிக்கு, அருண் உதவி செய்து வந்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சகா குமாரிக்கு பத்து ஏக்கர் நிலம் மற்றும் அழகு நிலையம் மூலம் அதிகப்படியான வருவாய் வருவது அருணுக்கு தெரியவர, ஷஹாகுமாரி உடன் ஆன, நட்பை மெல்லக் காதலாக அருண் மாற்றியுள்ளார்.

வயது முதிர்ந்த பெண் எனத் தெரிந்தும் ஷஹாகுமாரியை தீவிரமாக காதலித்ததுடன் இரண்டு மாதங்களுக்கு திருமணமும் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்தது. வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு அருணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், இருவரும் திருமணம் செய்து கொண்டு, காரக்கோணத்தில் உள்ள சகா குமாரியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, கடந்த சில தினங்களுக்கு முன் ஷஹாகுமாரி, தனது திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், வாட்ஸ் அப் மூலம் அவரது தோழிகளுக்கும் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த அருணின் நண்பர்கள் வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததாக கேலி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் இது குறித்து அருண், மனைவியான ஷஹாகுமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

நண்பர்களின் கேலி மற்றும் வீட்டில் ஏற்பட்ட பிரச்னையாலும் நொந்து போன அருண், தனது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக கிறிஸ்துமஸ் குடிலுக்குப் பயன்படுத்திய சீரியல் மின் விளக்கு ஒயரில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படுத்தி வீட்டு வாசலில் போட்டுள்ளார்.

ஷஹாகுமாரிவீட்டில் இருந்து வெளியே வந்த சமயத்தில் அந்த வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளார்.

அவர் இறக்கும் வரை காத்திருந்த அருண், மரணத்தை உறுதி செய்த பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இவர் இறந்து நான்கு மணி நேரங்களுக்கு மேல் ஆனதாக கூறியதால், பொலிசார் அருணைப் பிடித்து விசாரித்த போது, அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.





51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்த இளைஞன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு