07,May 2024 (Tue)
  
CH
சினிமா

இசைஞானி இளையராஜா மன உளச்சலில் இருப்பதாக இதனால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது ரத்தாகியுள்ளது

நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இன்று செல்ல இருந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருப்பதால் அவருடைய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கக் கோரி உரிமையியல் வழக்குத் தொடா்ந்துள்ளாா். மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருகிறாா் என்ற தகவல் வெளியானால், அங்கு ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள். எனவே, இதன் காரணமாக இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாக போகும் பட்சத்தில், இளையராஜாவுடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து. அதனைத் தொடா்ந்து இருதரப்பிலும் சம்மதம் தெரிவித்து மனுதாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ அரங்கத்தில் இளையராஜாவை ஒருநாள் அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம். அதே நேரம் அங்குள்ள பொருள்களை எடுத்துக் கொள்வதோடு, தியானமும் செய்யலாம். மாலை 4 மணிக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. இளையராஜா அங்கு இருக்கும் போது வேறு யாரும் செல்லக்கூடாது. இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவா் பேசிக் கொள்ளக்கூடாது. இவற்றைக் கண்காணிக்க வழக்குரைஞா் வி.லட்சுமிநாராயணன், வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்படுகிறாா் என உத்தரவிட்டாா்.

இரண்டு தரப்பினரும் இவரிடம் தான் பேசிக் கொள்ள வேண்டும். இளையராஜா எந்த நாளில் அங்கு செல்கிறாா் என்பது குறித்து இருதரப்பு வழக்குரைஞா்களும் பேசி முடிவு செய்ய வேண்டும். இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் நாளில் உரிய போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர ஆணையா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

இன்று பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சென்று அங்கு வைத்துள்ள பொருள்களை எடுத்து வரவும், தியானம் செய்யவும் இளையராஜா திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய இன்றைய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இளையராஜா மனஉளைச்சலில் இருப்பதால் வர இயலவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இசைஞானி இளையராஜா மன உளச்சலில் இருப்பதாக இதனால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது ரத்தாகியுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு