பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும் பெரிதாக வருத்தப்படவில்லை.
அத்தோடு இனி போட்டியாளர்கள் இருக்கப்போகும் இரண்டு வாரங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய புதிய அறிவிப்பை விஜய் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது தினந்தோறும் இரவு 9:30 ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் இன்று முதல் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸில் கடைசி இரண்டு வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்களும், விஜய் டிவி பிரபலங்களும் உள்ளே நுழைவது வழக்கம். எனவே அதற்கான ஒரு மாற்றமாக கூட இது இருக்கலாமென்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
0 Comments
No Comments Here ..