துருக்கியின் விமானம் ஒன்று பறவைக்கூட்டத்துடன் மோதிய நிலையில் அவரசமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
துருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN,) போயிங் 777 வகை சரக்கு விமானம் ஒன்று, துருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்தது.
இதன்போது விமானம் மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டத்துடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose) , உடல் பகுதியிலும் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து , விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.
இதன்பின் அனுமதியை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானி விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
0 Comments
No Comments Here ..