02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

இறுதிச்சடங்கு செய்த பின் வீடு திரும்பிய நபரால் ஏற்பட்ட அதிர்ச்சி

ஹோண்டூராஸ் நாட்டில், ஒரு பெண் இறந்த தன் கணவருக்கு சிறந்த முறையில் இறுதிச்சடங்கை முடித்திருந்த நிலையில், நான்கு நாட்களுக்குப்பின் அவர் வீடு திரும்ப, அதிர்ச்சியில் உறைந்தார் மனைவி.

Victoria Sarmiento என்ற பெண்ணின் கணவரான Julio Sarmiento (65), திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.

வெளியே சென்ற கணவர் பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால், கணவரது அடையாள அட்டையுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் Victoria.

அடையாள அட்டையைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அதிலுள்ள புகைப்படத்திலுள்ள நபர் சமீபத்தில் கொரோனாவால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். Victoria தன் கணவரை அடையாளம் காட்ட, அவரது உடல் 30 மைல் தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உறவினர்கள் கூடி, இரவெல்லாம் கண் விழித்து துக்கம் அனுஷ்டித்து, மறு நாள் சிறந்த முறையில் கண்வர் உடலை அடக்கம் செய்துள்ளார் Victoria.

தொடர்ந்து நான்கு நாட்கள் கணவருக்காக Victoria துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென வீட்டுக்கு வந்த நபரைக் கண்டு திடுக்கிட்டுப் போயிருக்கிறார் அவர்.

காரணம், வீட்டுக்கு வந்தவர், Victoriaவின் கணவரான Julioவேதான்! அப்புறம் விசாரித்ததில், Julio வாக்கிங் சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் கீழே விழுந்து பல நாட்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் அங்கேயே கிடந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஒருபக்கம் கணவர் வந்துவிட்ட சந்தோஷம் இருந்தாலும், மறுபக்கம் அவரது இறுதிச்சடங்குக்காக 10,500 lempiras (320 டொலர்கள்) செலவிட்ட வருத்தத்தில், மருத்துவமனை தவறுதலாக வேறொரு நபரின் உடலை தந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் Victoria.

மருத்துவமனை நிர்வாகமோ, Victoriaதான் கணவர் என ஒருவரது உடலை அடையாளம் காட்டியதாக Victoria மீதே குற்றம் சாட்டியுள்ளதோடு, அவர் நீதிமன்றம் சென்றால் அதை எதிர்கொள்ள தங்களுக்கு சாதகமான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.





இறுதிச்சடங்கு செய்த பின் வீடு திரும்பிய நபரால் ஏற்பட்ட அதிர்ச்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு