03,May 2024 (Fri)
  
CH
தொழில்நுட்பம்

அமெரிக்க வாட்ஸ்அப்பிற்கு வேட்டு வைக்குமா? தமிழ்நாட்டில் உருவான அரட்டை ஆப்!!

முதல் மேட் இன் இந்தியா செயலியாக... அரட்டை ஆப் உருமாறுமா.. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது.. என்னென்ன அம்சங்கள் வரப்போகிறது...

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஸோஹோவின் மெசேஜிங் ஆப் ஆன அரட்டையின் (Arattai) பீட்டா வெர்ஷனை வெளியிட்ட சில நாட்களில் - ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் - 20,000 பதிவிறக்கங்களைக் கடந்துவிட்டது.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரட்டை ஆப் செயல்பாட்டில் இருந்தபோது, நிறுவனம் அதன் பீட்டா பதிப்பை வெளியிட முடிவு செய்தது.

வாட்ஸ்அப்பின் சமீபத்திய கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு மக்கள் மாற்றீடுகளை நாடி வரும் நிலைப்பாட்டில் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற உலகளாவிய ஆப்களில் சேருவதற்கான விருப்பங்கள் அதிகரித்துள்ளது.

இந்நிலைப்பாட்டில், வாட்ஸ்அப் குறித்த பரபரப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்தியாவை அடிப்படையாக கொண்ட மெசேஜிங் ஆப் ஆக அரட்டை களமிறங்கி உள்ளது.

"இது (அரட்டை) ஒரு வார காலப்பகுதியில் நாங்கள் ஒன்றிணைகப்பட்ட ஒரு ஆப் அல்ல. இது ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு மற்றும் உற்பத்தித்திறன், பயனர் தனியுரிமையில் வலுவான கவனம் போன்றவைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது." என்று ஸோஹோவின் வி.பி. பிரவல் சிங் ஒரு தொலைபேசி உரையாடலில் ET NOW வலைத்தளத்திடம் கூறியுள்ளார்.

அரட்டை ஆப்பின் தரவு தற்போது இந்தியாவில் ஸோஹோவின் சேவையகங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மெசேஜிங் ஆப், உடனடி முன்னுரிமையாக எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் பணியாற்றி வருகிறது.

"நாங்கள் ஒரு பீட்டா சோதனையை செய்தோம், ஆனால் இறுதி வெளியீட்டில் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனை கொண்டுவருவோம். கடந்த சில நாட்களில் நாங்கள் மகத்தான தயாரிப்பு கருத்துக்களைப் பெற்று பல வகையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதன் முழு வெளியீடு ஆறு மாதங்களுக்குள் நடக்கும்" என்று பிரவல் சிங் கூறி உள்ளார். அரட்டை ஆப் இப்போதைக்கு இலவசமாக டவுன்லோட் செய்யக்கிடைக்கிறது.

இது எந்த வகையான பயனர்களை ஈர்க்கும் என்று கேட்கப்பட்டபோது, பிரவல் சிங், "ஹூவாய் அல்லது சியோமி என்றால் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே தெரியும்.. ஆனால் இஅவைகள் இன்று உலகளாவிய பிராண்டுகளாக உருமாறி உள்ளன" என்று பதில் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவால் அரட்டை ஆப் உருவாக்கப்பட்டுள்ளது

தற்போது வரை இந்த ஆப், சாட், காலிங், பைல் ஷேரிங் மற்றும் டாக்குமெண்ட் ஸ்கேனிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் இதில் டிஜிட்டல் லாக்கர், எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் கேமிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படும்.

நிறுவனர் ஸ்ரீதர் வெம்பு ஒரு உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஸோஹோவை ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய ஒரு நிறுவனமாக மாற்றி உள்ளார்.

கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2019 ஆம் ஆண்டில், சிலிக்கான் வேலியில் இருந்து தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். இந்த முன்முயற்சியை ஸோஹோ நிறுவனம் பல ஆண்டுகளாக செய்ய செய்து வருகிறது.

உண்மையில், நிறுவனத்தின் "பொறியியல் திறமைகளில்" 15-20% தகுதி அடிப்படையில் பொறியாளர்கள் அல்ல, ஆனால் சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஸோஹோவால் கோடிங் மற்றும் புரோகிராமிங் பயிற்சி பெற்றவர்களே ஆவார்கள்.




அமெரிக்க வாட்ஸ்அப்பிற்கு வேட்டு வைக்குமா? தமிழ்நாட்டில் உருவான அரட்டை ஆப்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு