06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரித்தானியா

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 11 முதல் 13 வரை பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் பிரிட்டன் தலைமையில் நடக்கும் கூட்டம் தொடர்பான விவரங்களை பொரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் இந்த ஜி 7 உச்சிமாநாட்டின் பார்வையாளர் நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் முன்னர் மோடிக்கு அழைப்பு விடுத்தபோது , அதற்கான முறையான அழைப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜி 7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தியாவுக்கு வருகை தரும் விருப்பத்தையும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளின் குழுக்களில் ஒன்றான ஜி 7 குழு பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குழுவாகும்.

இந்த ஆண்டு, மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

“இந்தியாவுக்கான நிரந்தர யு.என்.எஸ்.சி (ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்) இடத்தை ஆதரித்த முதல் பி 5 உறுப்பினரும், 2005’ல் ஜி 7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவை அழைத்த முதல் ஜி 7 உறுப்பினரும் பிரிட்டன் தான்.

தற்போதைய பிரிக்ஸ் தலைவராகவும், 2023’இல் ஜி 20 தலைவராகவும், இந்தியா உலகெங்கிலும் சிறப்பாக உருவாக்க உதவுகின்ற பலதரப்பு ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரித்தானியா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு