22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யாழ்ப்பாணம் மாநகரில் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பில் ஜனாதிபதியால் நேற்று (12) அதிசிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தை பிரதிபலிக்க வேண்டியதன் கவனத்தில் கொண்டு யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.




மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு