மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடன் விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டும் பொருட்டு இன்றைய தினமும் நாடாளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆங் சான் சூகி உள்ளிட்ட 350 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனத்தினை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..