ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
தலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கெமரா முன்பு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.உரிய மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின், இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..