14,May 2024 (Tue)
  
CH
விளையாட்டு

ஐபில் ஏலம் இன்று....

2021 -ம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள போகும் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் 164 வீரர்கள் இந்தியர்கள், 125 வீரர்கள் வெளிநாட்டவர்கள். இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ள 8 அணிகளில் வெறும் 61 காலியிடங்களே உள்ளன. இந்த 292 வீரர்களில் யார் யார் அந்த இடங்களை நிரப்ப உள்ளனர் என்பதில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் தொற்றியுள்ளது.

11 காலியிடங்களை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, வெறும் 35.4 கோடி ரூபாய் மட்டுமே கையில் வைத்துள்ளது. அதே நேரத்தில் வெறும் 3 காலியிடங்களை நிரப்ப ரூபாய் 10.75 கோடியை கையில் வைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

9 காலியிடங்களை கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) சுமார் 53.20 கோடியை கையில் வைத்துள்ளது.

கொரோனா பெருத்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தில் அதிரடி காட்டும் வீரர்களையும், மிதவேக பந்து வீச்சளர்களையும் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல், இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஏதிராக நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே அவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.




ஐபில் ஏலம் இன்று....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு