2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புதிய தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் தேர்தல் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் அமைப்பாளர்களாக செயல்பட்டு வருபவர்களை தக்க வைத்துக் கொண்டு புதிய தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கிய மூன்று முக்கிய கட்சி ஆர்வலர்களை நியமிக்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..