பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை உடன் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவில் பரவும் புதிய கோவிட் வைரஸ் மரபணு காரணமாக அங்கிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய அந்த தடை நீக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சுகாதார அதிகாரிகளினால் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தர கூடிய வகையில் இந்த தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளின் கீழ் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மீண்டும் வருகை தர முடியும். நாட்டுக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..