நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்குவீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் பஸ்ஸொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற பௌசருடன் மோதி பின்னர் மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிபிலையிலிருந்து மரண வீடொன்றுக்கு சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..