சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) காலை அங்குனகொலபிலெச சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார். தற்போதைய சட்ட நிலைமையை விளக்கிய சஜித் பிரேமதாச, சபாநாயகர் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினார். சிறைச்சாலையில் உள்ள எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது கட்சி எப்போதும் துணை நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
இலங்கை செய்தி













0 Comments
No Comments Here ..