இலங்கை கிரிக்கெட் அணி வீரா் உபுல் தரங்கா (36), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
15 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டில் விளையாடி வந்த தரங்கா, இலங்கை அணி கேப்டனாக 2017 ஜூலை முதல் நவம்பா் வரை பொறுப்பு வகித்துள்ளாா். இறுதியாக, கடந்த 2019-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் அவா் இடம் பிடித்திருந்தாா். இடதுகை பேட்ஸ்மேனான அவா் தொடக்க வீரராக ஆடி வந்தாா்.
2005 டிசம்பரில் ஆமதாபாதில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மூலம் சா்வதேச டெஸ்டில் அறிமுகமான உபுல் தரங்கா, கடைசியாக 2017-இல் பல்லெகெலேவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியிருந்தாா்.
2005-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை தொடங்கினாா். கடைசியாக 2019-இல் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடியிருந்தாா்.
2006-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சா்வதேச டி20 ஆட்டத்தை தொடங்கிய தரங்கா, கடைசியாக 2018-இல் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியுள்ளாா்.
0 Comments
No Comments Here ..