09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

ஸ்ரீ.....என்றால் என்ன?.....இதன் ரகசியம் தெரியுமா?

ஸ்ரீ என்ற பதம் செல்வம், மேன்மை அழகு புனிதம் இவற்றையும்_குறிக்கும்.

லட்சுமி_கடாட்சம்....பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ வசியமோ இருக்கும்.....அவர்கள் முகத்தில் பொலிவும், அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.


எப்போது ஒரு மனிதன் இப்பிறவியில் அனைத்து சுகங்களையும் வளங்களையும் பெற்று வாழ்கின்றானோ அவனே லட்சுமி கடாட்சம் பூரணமாக, முழுமையாக பெற்ற மனிதனாகக் கருதப்படுவான்.


ஸ்ரீ என்பது லட்சுமி தேவியைக் குறிக்கும்....ஸ்ரீ என்ற பதம் செல்வம், மேன்மை, அழகு, புனிதம் இவற்றையும் குறிக்கும்....இறைவன் அனைத்து செல்வங்களையும், வசதிகளையும், மேன்மைகளையும் தருவதால்தான் எல்லா தெய்வ மூர்த்திகளையும் குறிக்கும் அடைமொழியாக ஸ்ரீ என்ற சொல்லைச் சேர்த்து ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் என்று அழைக்கிறோம்.


ஸ்ரீ என்ற தேவமொழி வார்த்தைக்குப் பதிலாக தமிழ்ப் பதமான திரு என்ற அடைமொழியையும் பயன்படுத்தலாம்....ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ எனக் குறிப்பிடுகிறோம். 


இதன் ரகசியம் தெரியுமா?


செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். 


திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி உறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ என குறிப்பிடுகிறோம். 


லட்சுமி கடாட்சம் இருந்தால் தொட்டதெல்லாம் பொன் ஆகும்...அனைவரும் நண்பர்கள் ஆவர்..புகழ்,செல்வாக்கு தானாகவே ஏற்படும்...


முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன.


ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “”அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.


”நான் தான் மகாலட்சுமி; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். பிரம்மன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,” என்றாள்.


மகாலட்சுமி போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.


"அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,” என்றார்.


லட்சுமியும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.


வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை தூக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனை பிடி!” என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர்.


உடனே அரசன், “”முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,” என்றான்.


கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; லட்சுமிதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.


அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.


இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் தூங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.


கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது.


“முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!” என்றான்.


இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.


ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர்.


மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.


அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை தூக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.


மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது துõக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.


கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, “”நான் தங்கøள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.


கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,” என்று கோபப்பட்டான்.


முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை தூக்கி பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,” என்றார்.


மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.


நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “”எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,” என்றார்.


மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமி போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.


நம் வாழ்விலும் அவ்வப்போது சோதனைகளும்,வேதனைகளும் இயல்பு என எடுத்து கொள்ள வேண்டும்.


1. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

 

2. நல்ல வழியில் சம்பாதித்ததை சமுதாயத்திற்காகச் செலவிடுவது பெரும் பாக்கியமாகும்.

 

3. வெற்றியோ தோல்வியோ… எதையும் எதிர்பார்க்காமல் ஓடிக் கொண்டிரு.

 

4. தீமைகளோடு போரிடுங்கள். அவற்றை வென்றால், அமைதி தேடி வரும்.

 

5. பிறருடைய கருத்துக்கு செவிசாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.

 

6. தன்னிடம் நம்பிக்கை இல்லாத மனிதன், கடவுளிடமும் உறுதியான நம்பிக்கை வைக்க முடியாது.

 

7. துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.




ஸ்ரீ.....என்றால் என்ன?.....இதன் ரகசியம் தெரியுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு