18,Apr 2024 (Thu)
  
CH
SRILANKANEWS

இன்று முதல் பயணக் கட்டுப்பாடு

கொவிட் வைரசு தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இரண்டுவிதமான பயண கட்டுப்பாடுகள் இன்று (12) முதல் நடைமுறைபடுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று புதன் கிழமை தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாளாந்தம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுவதாக கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்..

இதுதவிர நாளை வியாழக்கிழமை (13) இரவு 11.00 தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 4.00 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும்.

இருப்பினும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகத்திற்கு எந்தவித தடையுமில்லையென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இன்று முதல் பயணக் கட்டுப்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு