தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் - 2
செய்முறை :
ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..