04,May 2024 (Sat)
  
CH
சினிமா

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சியை படமாக்க புஷ்பா படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதியும், 2-ம் பாகம் அடுத்தாண்டும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீஷா பதானியை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.





கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சியை படமாக்க புஷ்பா படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு