27,Apr 2024 (Sat)
  
CH
தொழில்நுட்பம்

இந்தியாவில் 5ஜி சோதனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

இந்தியாவில் நடைபெறும் 5ஜி சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மத்திய டெலிகாம் துறை இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை பயன்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்களுக்கு 700 MHz, 3.5 GHz மற்றும் 26 GHz பேண்ட்களை ஒதுக்கியுள்ளது. 

சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க அனுமதி கிடையாது. 3.5 GHz, 26 GHz மற்றும் 700 MHz ஸ்பெக்ட்ரம்களில் முறையே 800, 100 மற்றும் 10 யூனிட்கள் நிர்ணயம் செய்துள்ளது. 

இந்த ஸ்பெக்ட்ரம்களை ஆறு மாத காலத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ரெடி நெட்வொர்க் வைத்திருப்பதால், இரு நிறுவனங்களுக்கும் இது மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இந்தியாவில் 5ஜி சோதனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு