வலம்புரி சங்கு பூமியில் பல்வேறு கடல் பகுதியில் கிடைக்கிறது. சாஸ்திரங்களில் சொல்வது போல முக்கியமான ஏழு வகை சமுத்ரங்களில் இருக்கிறது.
ஒவ்வொரு வகை கடலில் ஒவ்வொரு வகையான சங்குகள் கிடைக்கும். அதில் இருக்கும் அலை, கடல் அடி மண் தன்மை மற்றும் கனிமங்கள் கொண்டு வேறுபாட்டுடன் அமையும்.
வங்காள விரிகுடா கடலில் கிடைக்கும் சங்கும் இந்துமஹா சமுத்திரத்தில் இருக்கும் வலம்புரி சங்கும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். முள் போன்று இருக்கும் சங்கு இந்துமஹா சமுத்திரத்தில் இருப்பது. மொழுக்கென இருப்பது வங்க கடல் சங்கு.
முன்பு சங்கு எடுப்பது அதை மக்களுக்கு பயன்பாட்டிற்கு அளிப்பது என்பது மிகவும் கஷ்டமன காரியம். அதனால் வலம்புரி என்பது விஷேஷமாக கருதப்பட்டது. உலகமயமாதல் பின்பு பெரும்பாலும் ஆப்ரிக்கா, பிலிபைன்ஸ் நாடுகளில் இருந்து சங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய சங்கை விட இறக்குமதி சங்குகள் மிகவும் மலிவானது. அதிக சப்ளை, டிமாண்டை குறைத்துவிட்டது.
இது தவிர போலியாக வலம்புரி சங்கு தயாரிக்க இயந்திரங்கள் வந்துவிட்டன. கடல் சிப்பிகளை ஒரு பக்கம் போட்டால் மறுபுறம் மாவாக அரைத்து விரும்பிய மோல்டுகளில் வலம்புரியாக உருவாக்கித் தருவார்கள். நீங்கள் இந்த வகை சங்குதான் சிறந்தது என கூறத்துவங்கினால் எதிர்காலத்தில் அதுமட்டுமே தொழிற்சாலையில் செய்யும் நிலை ஏற்படலாம்.
மீன்கள் போல இது ஒரு கடல்வாழ் உயிரினம் என்ற மொன்னையான விஞ்ஞான விளக்கம் அவசியமற்றது. காரணம் சங்கில் இருக்கும் பூச்சி இறந்தவுடன், சங்கு கொண்டு கோவிலில் அபிஷேகம் செய்யலாம். ஆனால் மீன் இறந்தவுடன் அதன் செதில்களை எடுத்து அர்ச்சனை செய்வதில்லை. ஏன்? சங்குக்கும் மீனுக்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம் உண்டு. இரண்டும் கடல்வாழ் உயிரினம் என்பது மிக மேலோட்டமான கருத்து.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..