26,Apr 2024 (Fri)
  
CH
சமையல்

இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி

கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கப்,

 மைசூர் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்,

புளி - சிறிது,

பெருங்காயம் - 1 சிட்டிகை,

சிவப்பு மிளகாய் - 7,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.

ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு