01,May 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

நோய் தீர்க்கும் கருடாழ்வார் ஸ்லோகம்

நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் கருடாழ்வாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். உங்களை அறியாமலேயே, ஒரு சக்தி உங்களுக்குள் வந்து சேரும், என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான கருடாழ்வார் மந்திரம் இதோ.


ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய விஷ்ணு

பக்தி பிரியாய அமிர்த

கலச ஹஸ்தாய பஹு

பராக்ரமாய பக்ஷி ராஜாய

சர்வ வக்கிர சர்வ தோஷ,

விஷ சர்ப்ப விநாசனாய

ஸ்வாஹா


தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நோய் தீர்க்கும் கருடாழ்வார் ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு