இந்த முத்திரை செய்யும் போது மனம் ஒருமுகப்பட்டு செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும். இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரைச் செய்ய வேண்டும்.
செய்முறை
கைவிரல்களை மடக்கி முஷ்டியை உருவாக்குங்கள். பெருவிரலால் மோதிர விரலின் மேல் பதிந்து இருக்கட்டும். நடு விரலை நிமிர்த்தி வளைவின்றி நேராக வைத்துக் கொள்ளுங்கள். சுண்டு விரலை ஆள்காட்டி விரலால் நிமிர்ந்து அதன் பக்கவாட்டு பகுதி நடுவிரலின் நடுக்கோடு இருக்குமிடத்தில் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ளவும். சுட்டுவிரலின் மேல் பகுதியை மட்டும் சற்றே வளைத்து அங்குசம் போல் வைத்துக் கொள்ளுங்கள் கைகள் மார்புக்கு அருகில் இருக்கட்டும். இதுவே அங்குச முத்திரை.
மனம் ஒருமுகப்பட்டு செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும். இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரைச் செய்ய வேண்டும். சுவாசம் இயல்பான நடையில் இருந்தால் போதும். ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும். மூச்சை அடக்குதல் கூடாது.
பலன்கள்
தடைகள், சோதனைகள் அகலும்; வாழ்க்கை இன்பமாகும்.
நீண்ட காலமாக நோயின் கொடுமைகளை அனுபவித்தவர்கள் கூட இந்த முத்திரை செய்தால் நோய் படிப்படியாகக் குறையும்.
அங்குச முத்திரையை தொடர்ந்து செய்து வர பருவுடலின் இச்சைகள் படிப்படியாக அடங்கும்.
ஆன்மீகத்தில் மேல் நிலையை அடைய விரும்புவோர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரே முத்திரை இது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..