ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல எனவும் நாட்டை சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக சற்றுமுன் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் நாட்டை தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் நாட்டில் உள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும்,
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் மிக அவதானமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..