26,Apr 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு சுவரேவ் தகுதி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) - அலெக்சாண்டர் சுவரேவ் மோதினார்கள். இதில் 3-வது வரிசையில் உள்ள சுவரேவ் 6-4, 3-6, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ரூப்லேவ் அரை இறுதியில் 2-6, 6-3, 6-3 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவை (ரஷியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- ஜில்டெச்மேன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

ஆஸ்லே பார்டி அரை இறுதியில் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.

ஜில்டெச்மேன் அரை இறுதியில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 5-வது வரிசையில் உள்ள கரோலினா பிலிஸ்கோவாவை (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இறுதிப் போட்டிக்கு சுவரேவ் தகுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு