நடிகர் சூரி இல்ல திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தற்போது காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..