டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அடுத்ததாக வடிவேலுவுடன் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..