29,Apr 2024 (Mon)
  
CH
சமையல்

மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. இன்று மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :


மாப்பிள்ளை சம்பா அரிசி - 100 கிராம்,

தண்ணீர் - 100 மில்லி,

மோர் - 50 மில்லி,

சின்ன வெங்காயம் - 8 ,

பச்சை மிளகாய் - ஒன்று ,

கறிவேப்பிலை - சிறிதளவு,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

கடுகு - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு