27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

இங்கிலாந்து, ஜெர்மனியில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு

ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.

உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரசானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவத் தொடங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 

இதேபோல், ஜெர்மனியிலும் முதல் முறையாக 2 பேருக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இங்கிலாந்து, ஜெர்மனியில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு