03,May 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

சிவபெருமான் எழுதிய திருவாசகம்

ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். மாணிக்கவாசகரிடம் தாங்கள் எழுதிய ‘திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகரும் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் அவற்றை எழுதிக் கொண்டார். பின்பு திருவாசகம் எழுதப்பட்ட அத்தனை ஓலைச் சுவடிகளையும் நடராசர் சன்னிதி முன்பு வைத்து விட்டு பெருமான் மறைந்து விட்டார்.


மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னிதியில் கிடந்த நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போனார்கள். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் ‘மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்’ எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்ததை பார்த்து மீண்டும் திகைத்து போனார்கள். உடனே மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு மாணிக்கவாசகரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

அவரும் ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். கடைசியில் பெருமானின் கையொப்பத்தை கண்டு பிரமித்தவராய் ‘‘ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்’’ என்றார். தன்னை நாடி வந்தது பெருமான்தான் என்பதை நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினார்கள். மாணிக்கவாசகர், புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராஜப் பெருமானைக் காட்டி ‘‘இந்த பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்’’ என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். இந்த திருவாசகம் சிவபுராணம் என்றும் அழைக்கப் டுகிறது.


திருவாசகத்தின் சிறப்புகள்


* நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகம் தொடங்குகிறது.


* முதல் பதிகத்தில் 6 இடங்களில் ‘வாழ்க’ என முடியும். 2-வது பதிகத்தில் 5 இடங்களில் ‘வெல்க’ என முடியும்.


* 3-வது பதிகத்தில் 8 இடங்களில் ‘போற்றி’ என முடியும்.


* இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.


* 32-வது வரியில் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.


* திருவாசகத்தின் 18-வது வரியான ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.


* ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.


* இறந்த வீட்டில் கட்டாயம் திருவாசகம் படிக்க வேண்டும்.


* `புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்’ என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





சிவபெருமான் எழுதிய திருவாசகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு